அணிசேரா நாடுகளுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் ஐ.நா. குழுவை எதிர்க்கும் இலங்கையின் முயற்சிக்கு முட்டுக்கட்டை

அணிசேரா நாடுகளுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் ஐ.நா. குழுவை எதிர்க்கும் இலங்கையின் முயற்சிக்கு முட்டுக்கட்டை
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 12:54.56 AM GMT +05:30 ]
இலங்கை பற்றியும் இலங்கையின் பொறுப்புச் சொல்லும் கடப்பாடு தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்குவதற்கென ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவுக்கு எதிராக அணிசேரா இயக்கத்தினால் வரையப்பட்ட கடிதம் பற்றியும் நேற்று முன்நாள்…. 

….ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு ன்பாக இடம்பெற்ற மதியநேர விளக்கவுரையின் போதும் பின்னர் மேல் மாடியில் நெல்ஸன் மண்டேலாவின் 92 ஆவது ஜனனதின வைபவத்தின் போதும் சரமாரியாக கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டன என்று ஐக்கியநாடுகள் வளாக ஊடகமான இன்னர் சிற்றி பிறஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


அணிசேரா இயக்கத்தின் அங்கத்தவர்கள் மத்தியில் இலங்கையை பாதுகாப்பதற்கான பொறுப்பு என்ற சொற்பதங்கள் அடிக்கடி கேட்டன என்றும் இன்னர் சிற்றி பிறெஸ் செய்தியாளர் தெரிவித்தார்.


அணிசேரா நாடுகள் ஏகமனதாக இல்லாவிட்டாலும் அநேகமான நாடுகள் இலங்கையை பாதுகாப்பதற்கான பொறுப்பை ஏற்க மறுப்பு தெரிவிக்கின்றன. ஆனால் அணிசேரா இயக்கத்தின் தீர்மானங்களுக்கு சகல அங்கத்துவ நாடுகளினதும் இணக்கப்பாடு அவசியமாகும் என்றும் இன்னர் சிற்றி பிறஸ் சுட்டிக்காட்டி யுள்ளது.


காஸாவுக்கான நிவாரணப் படகுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து இஸ்லாமிய மாநாட்டு நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளே இலங்கையை பாதுகாப்பதற்கான பொறுப்பை கோரும் முயற்சிகள் தாமதமடையக் காரணம் என்று இலங்கையும் பல அணிசேரா நாடுகளும் கூறுகின்றன.


ஆனால் இலங்கையை பாதுகாப்பதற்கான பொறுப்பு தற்போது அணிசேரா நாடுகளின் குழப்பநிலையில் சிக்கியுள்ளது என்றும் இன்னர் சிற்றி பிறஸ் தெரிவிக்கிறது.


அணிசேரா இயக்கத்தை பொறுத்த வரையில், இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை எகிப்திற்கு அடுத்து ஈரான் ஏற்றுக் கொள்ளும் என்பது தற்போது உறுதியாக இல்லை என்று பிறஸ் தெரிவித்துள்ளது.


பாரசீக குடாவை சேர்ந்த மன்னராட்சி நாடுகள் கூட்டமைப்பும் ஆபிக்க ஒன்றி யத்தில் அங்கம் வகிக்காத அரேபியாவின் மக்றெப் பிராந்திய நாடு ஒன்றும் ஈரானின் தலைமைத்துவத்தை எதிர்க்கின்றன.


அணிசேரா நாடுகள் இயக்கத்திற்கு ஈரான் தலைமைதாங்க விரும்பிய போது வெனிசுவேலா 77 நாடுகள் குழுவுக்கு தலைமை தாங்க விரும்பியது.


செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஆலோசனைக்குழு தற்போது 8 அங்கத்தவர்களைக் கொண்ட குழுவாக விஸ்தரிக்கப்பட்டு நவநீதம்பிள்ளையின் நியூயோர்க் பிரதிநிதியாக சேவையாற்றி அண்மையில் விலகிய ஜெஸிகா நியூறித் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை இன்னர் சிற்றி பிறஸ் வியாழக்கிழமை பிரத்தியேகமாக அறிவித்திருந்தது.


ஊழல் எதிர்ப்பு, குடும்ப ஆட்சி எதிர்ப்பு கொள் கையுடைய நியூறித்தின் நியமனம் ராஜபக்ஷாக்களின் ஆதரவாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் பிறெஸ் தெரிவித்துள்ளது.


இந்த ஆதரவாளர்கள் இப்பொழுது இன்னர் சிற்றி பிறஸ் அறிக்கைகளுக்கும் அப்பால் சென்று நவநீதம்பிள்ளைக்கும் நியூறித்துக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள். இந்த மாதியான அரசியலையே ராஜபக்ஷாக்கள் நடத்துகிறார்கள் என்றும் பிறஸ் தெரிவித்தது.


மற்றுமொரு விவாதம் அவர்கள் ன் வைத்தது என்னவெனில், நிபுணர்கள் குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்ட மர்சூகி தருஸ்மன் முன்னர் இலங்கை நியமித்த சர்வதேச குழுவில் கடமையாற்றிவிட்டு அவருக்கு சேரவேண்டிய கட்டணத்தை பெறுவதற்காக தேவையற்ற விடயங்களை முன்வைத்து இலங்கையுடன் முரண்பட்டுக் கொண்டார் என்றும் தெரிவித்தார்கள்.


மேலும், விசாரணைக்குழு பொறுப்பு சொல்லும் கடப்பாடு பற்றிய பிரச்சினையை எழுப்பாத பட்சத்தில் குடும்ப ஆட்சி, ஊழல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள தாம் விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.





Speak Your Mind

Tell us what you're thinking...
and oh, if you want a pic to show with your comment, go get a gravatar!