கொழும்பில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி, இரண்டு பொலிஸார் பலி

கொழும்பில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி, இரண்டு பொலிஸார் பலி
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 02:52.26 PM GMT +05:30 ]
கொழும்பு, நாரஹென்பிட்டி பிரதேசத்தின், எல்விட்டிகல பகுதியில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி, இரண்டு  பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 பொலிஸ்  கான்ஸ்டபிள் ஒருவரும், நீச்சல் பயிற்றுவிப்பாளர் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த  பொலிஸ் கான்ஸ்டபிள் நீரில் மூழ்கியதாகவும், அவரைக் காப்பற்றச் சென்ற பயிற்றுவிப்பாளரும் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Speak Your Mind

Tell us what you're thinking...
and oh, if you want a pic to show with your comment, go get a gravatar!