பிரதமர் பதவியை வகிக்கும் எதிர்பார்ப்பு தம்மிடமும் உள்ளதாக அமைச்சர் மைத்திரிபால அறிவிப்பு
| பிரதமர் பதவியை வகிக்கும் எதிர்பார்ப்பு தம்மிடமும் உள்ளதாக அமைச்சர் மைத்திரிபால அறிவிப்பு |
| [ சனிக்கிழமை, 24 யூலை 2010, 02:45.38 PM GMT +05:30 ] |
பிரதமர் பதவியை வகிக்கும் எதிர்பார்ப்பு தம்மிடமும் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். |
பதவிகளை தாம் துரத்திப் போகவில்லை என்ற போதிலும், சாதாரண மனிதன் என்ற ரீதியில் தமக்கும் விருப்பங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது பிரதமர் பதவி தமக்குக் கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இரண்டாம் தவணைக்காக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் போது அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். |
பிரதமர் பதவியை வகிக்கும் எதிர்பார்ப்பு தம்மிடமும் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.